ச்சீ.. கன்றாவி.. உதட்டில் முத்தமா? உங்களுக்கு என்ன பிரச்சனை? சீரியல் நடிகை பதிலடி!
சென்னை: விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'சுட்டும் விழி சுடரே' சீரியலில், கம்பீரமான டிஎஸ்பி (DSP) கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகை வெண்ணிலா. சின்னத்திரையில் பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தற்போது இணையத்தில் தன்னைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கு முகத்திலடித்தாற்போல் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
சீரியல் நடிகை: பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை வெண்ணிலா, யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், இன்ஸ்டாகிராமில் என் மகனுடன் இணைந்து அடிக்கடி வீடியோக்களை போடுவேன். அதில், நேற்று பதிவிட்ட வீடியோவில் மகனுக்கு முத்தம் கொடுப்பதை போல ஒரு ரீல்ஸ் போட்டு இருந்தேன். அந்த வீடியோவை பார்த்தவர்கள், மகனை கெடுக்கிறாள், மகனை கட்டிப்பிடிக்கலாமா... மகனுக்கு முத்தம் கொடுக்கலாமா என கேட்கிறாள். அவன் என்னுடைய மகன், அவனைப் பெற்றவள் நான். அவனைக் கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க, கொஞ்ச, ஏன்... தப்பு செய்தால் அடிக்கக்கூட எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவன் என் சொத்து, அவனிடம் என்னுடைய பாசத்தை நான் வெளிப்படுத்துகிறேன். அதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

என்ன தவறு?: நான் வெளியிடும் ரீல்ஸ்களை வியூஸுக்காகவும், பணத்திற்காகவும் போடவில்லை. எனக்கு பிடித்ததால் தான் பகிர்கிறேன். என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அது பிடிக்கவில்லை என்றால் பிளாக் செய்து விட்டு செல்லலாம், இல்லை தள்ளிவிட்டு செல்லாம். ஆனால் மோசமான கமெண்ட் போடுவது சரியில்லை. இதுமட்டுமில்லாமல், தனது உடை குறித்தும் விமர்சனம் செய்கிறார்கள்.

அதிரடியான பதில்: "நான் என்ன உடை அணிய வேண்டும் என்பது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதைத்தான் நான் உடுத்துவேன். அதைத் தீர்மானிக்க வேண்டியது நான்தான், மற்றவர்கள் அல்ல" என்று மிகவும் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். தன்னைச் சுற்றி எழும் அவதூறுகளுக்கும், விமர்சனங்களுக்கும் துணிச்சலாகவும், நேர்த்தியாகவும் நடிகை வெண்ணிலா கொடுத்துள்ள இந்த அதிரடிப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications