Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? - நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள், சாமி ரேஞ்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, ஜேகே ரித்தீஷ் படம் அளவுக்குக் கூட இல்லையே என்ற விமர்சனம் ராஜபாட்டை மீது விழுந்துவிட்டது (இந்தப் படத்தில் லத்தீஸ்வரன் என்று ஒரு ஹீரோவை வேறு விக்ரம் விமர்சனம் பண்ணுகிறார். அது ஜேகே ரித்தீஷா, லத்திகா ஹீரோ பவர் ஸ்டாரா என்ற காமெடி விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது!)
இந்த நிலையில், ராஜபாட்டைக்காக நிருபர்களைச் சந்தித்தார் நடிகர் விக்ரம். இன்று ரெஸிடென்ஸி டவரில் நடந்த இந்த சந்திப்பின்போது, நிருபர்கள் நேரடியாகவே விக்ரமிடம் இந்தப் படம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சுசீந்திரன் - விக்ரம் என்றதும், பெரும் எதிர்ப்பார்ப்பு உருவானது. அதைப் பொய்யாக்கிவிட்டதே இந்தப் படம். ஏன் இப்படியொரு படம் தந்தீர்கள் விக்ரம்? என்று கேள்வி எழுப்ப, சற்று சுதாரித்து பதில் தந்தார் விக்ரம்.
தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு ஜாலியா, அதிரடியா, கலர்புல்லா ஒரு படம் தரணும் என்று விரும்பித்தான் இந்தப் படம் செய்தோம். இந்தக் கதை எனக்கு மிகவும பிடித்துப் போனதால் ஒப்புக் கொண்டோம். ஒரே மாதிரி சீரியஸ் படம் கொடுத்தா ரசிகர்களுக்கு அலுத்துப் போகும் என்பதால் எடுத்த முடிவு அது. நீங்கள் தியேட்டரில் ரசிகர்களோடு படம் பாருங்கள் (நேற்று நிருபர்களுடன் படம் பார்த்தார் விக்ரம்!!). ரசிகர்கள் எந்த அளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது," என்றார்!
சரி... படத்தில் வரும் நில அபகரிப்பு அக்கா கேரக்டர் நிஜத்தில் யாருங்க?