எக்ஸ்க்ளூசிவ்: வால்டர் நடிகை.. ஏ.சி. திரிலோகச்சந்தர் பேத்தி.. யாமினி சந்தர் பேட்டி!
சென்னை: சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள வால்டர் திரைப்படத்தில், நடித்துள்ள நடிகை யாமினி சந்தர் முதன் முதலாக அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
அன்பே வா, எங்க மாமா, பத்ரகாளி, தெய்வமகன் உள்ளிட்ட பல அழியாத காவியங்களை இயக்கிய ஏ.சி. திரிலோகச்சந்தரின் பேத்தி யாமினி சந்தர் வால்டர் படத்தில் நடித்துள்ளார்.

இதுவரை எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுக்காத யாமினி சந்தர் முதன்முறையாக நமது பிலிமி பீட் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார்.
வரும் மார்ச் 13ம் தேதி வெளியாகவுள்ள சிபிராஜின் வால்டர் படத்தில், வில்லன் நட்டி நடராஜுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் யாமினி நடித்துள்ளார்.
கோலிவுட், பாலிவுட் என சிறந்த ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் விளங்கும் நட்டி நடராஜ், செட்டில், மிகவும் சாதாரணமானவராகவும், தனக்கு நடிப்பில் பல உதவிகளையும் செய்தார் என்றும் யாமினி கூறியுள்ளார்.
சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் படத்தின் தலைப்பைக் கொண்டு வால்டர் எனும் பெயரில் சிபிராஜ் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் அன்பரசன் இயக்கி உள்ளார்
சிபிராஜுக்கு ஜோடியாக, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தில் நடித்த ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார். சமுத்திரகனி, நட்டி நடராஜ், யோகி பாபு, சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி குறித்தும், தனது தாத்தா திரிலோகச்சந்தர் குறித்தும் யாமினி பிரத்யேகமாக பேசியுள்ள பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











