twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யானை ஜோக் கதிருக்கு எப்போது திருமணம்?... எப்படி பட்ட பொண்ணு தெரியுமா?

    |

    சென்னை: சினிமாவில் இருப்பதை யாரும் வேலையாக கருதுவதில்லை என்றும், நடிகர் அர்னால்டுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் யானை ஜோக் கதிர் தெரிவித்து பேட்டி அளித்து உள்ளார் .
    மேலும் அவர் கூறுகையில், நான் இன்று இன்டர்வியூ கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கடவுள் தான் .

    நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி ஜூலை 1ம் தேதி வெளியாகும் டி.பிளாக் திரைப்படத்தில் நடித்துள்ள கதிர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

    விக்ரம் ரோலக்ஸ்.. ராக்கெட்ரியில் என்ன ரோல் செய்தார்? ஆர்வத்தில் ரசிகர்கள்!விக்ரம் ரோலக்ஸ்.. ராக்கெட்ரியில் என்ன ரோல் செய்தார்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

    உண்மையாக இருப்போம்

    உண்மையாக இருப்போம்

    கேள்வி: இயக்குநர்களுடன் எப்படி தொடர்ந்து நெருக்கமாக இருக்கிறீர்கள். என்ன காரணம்?

    பதில்: மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். உண்மையாக பேசினால் தான் தைரியமாக வெளியே வர முடியும். பொய் சொன்னால் அடுத்தடுத்து பொய் சொல்ல வேண்டிய நிலைமை வரும். உண்மையான மனிதர்களை தான் அனைவரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் உண்மையாக இருப்போம். இந்த காரணத்தினால் நான் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்களே மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்கிறார்கள் .

    போரடிக்க கூடாது

    போரடிக்க கூடாது

    கேள்வி: டி. பிளாக் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: டி. பிளாக் படத்தில் மயிலோ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். யூடிப்பில் எருமை சாணி விஜயுடன் இணைந்து "அது எங்க ராஜா காலம்" வெப்சீரியஸ் செய்தேன். யூடிப்பில் முதன்முறையாக என்னை அறிமுகப்படுத்தியதும் விஜய் தான். என் பேர் போட்டு ஸ்கிரிப்ட் எழுதியதும் விஜய் தான். நடிகர் ஹிப்பாப் ஆதி மூலம் தான் எருமை சாணி விஜயின் அறிமுகம் கிடைத்தது. ஹிப்பாப் ஆதி நடித்த "நான் சிரித்தால்" படப்பிடிப்பின்போது, நான் ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுத்தது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போது அவர் கூறுகையில், நம்ம சேர்ந்து பண்ணலாமா என்று கேட்டார். நானும் சரி என்று கூறி பின்னர் இணைந்து பணியாற்றினோம். எந்த வேலையையும் ஆர்வத்துடன் செயல்தால் நன்றாக இருக்கும். சினிமாவில் நான் வரக்கூடிய காட்சிகள் போரடிக்க கூடாது என்பது மட்டும் தான் எனது குறிக்கோள் .

    மூன்று யானை இட்லி சாப்பிட்டது

    மூன்று யானை இட்லி சாப்பிட்டது

    கேள்வி: யானை ஜோக் கதிர் என்கிற ப்ராண்ட் குறித்து நீங்கள் கூற விரும்புவது

    பதில்: குழந்தைகளுக்காகவே தயார் செய்தது தான் யானை ஜோக். ஆனால் எல்லோருக்கும் பிடித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால் என்னை போனில் அழைத்து, நீ மூன்று யானை இட்லி சாப்பிட்டது என்று கூறி விட்டாய். என்னிடம் குழந்தை சந்தேகம் கேட்கிறது என்பார்கள். அப்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். வெள்ளந்தியாக இருக்கக்கூடிய பெரியவர்களுக்கும் யானை ஜோக் ரொம்ப பிடிக்கும் என்பதில் பேரானந்தம் .
    கேள்வி: சினிமா பயணத்தில் எப்போது அதிகமான சந்தோஷம் அடைந்தீர்கள்?
    பதில்: நான் மற்றவர்கள் பேசுவதை மிமிக்ரி செய்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக நான் பழனி சென்றபோது, அங்கே சிறுவர்கள் ஜாம்பி படத்தில் நான் பேசிய கொசு மாட்டிக்கிச்சு என்று வசனத்தை பேசிய காட்டியபோது மிகவும் சந்தோஷமடைந்தேன் என்றார்.

    வரிசையாக செல்லவேண்டும்

    வரிசையாக செல்லவேண்டும்

    கேள்வி: உங்களுக்கு சரியான படம் இன்னமும் அமையவில்லையோ என்ற எண்ணம் எங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ? உங்களுக்கு ...?

    பதில்: ப்ரி.கே.ஜி, எல்.கே.ஜி. யு.கே.வி, ஒன்றாம் வகுப்பு என வரிசையாக செல்ல வேண்டும். நேரடியாக 5ம் வகுப்புக்கு செல்லக்கூடாது. அதுபோன்று தான் சினிமாவிலும். விரைவில் நீங்கள் எதிர்பார்க்கின்ற படங்களில் நடிப்பேன். நடிகர்கள் விஜய்ஆண்டனி, அருள்நிதி, ஜெயம்ரவி, ஜீவி, ஹிப்பாப் ஆதி ஆகியோர் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகின்றனர். சிவக்குமாரின் சபதம் படத்தை பார்த்து விட்டு இயக்குநர் பிரதீப் எனக்கு கோமாளி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் நடித்து, டப்பிங் பேசி விட்டு வெளியே வரும் போது என்னை அழைத்து மனதார பாராட்டினார்.

    எனக்கு வேறு எதுவும் தெரியாது

    எனக்கு வேறு எதுவும் தெரியாது

    கேள்வி: உங்கள் குடும்பம் குறித்து ....

    பதில்: என்னை பொறுத்தவரை முதலில் குடும்பம் தான் முக்கியம். என்னை நம்பி சினிமாத்துறை செல்ல அனுமதித்தார்கள். எனக்கு வேறு எதுவும் தெரியாது. சாப்ட்வேர் கம்பெனிக்கு சென்றால் இரண்டு நாட்களில் வந்து விடுவேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை கொஞ்சம், கொஞ்சமாக காப்பாற்றி வருகிறேன். எனது வாழ்க்கையில் நிறைய நாட்கள் வருத்தப்பட்டது உண்டு. அப்போது கண்ணதாசனின் பாடல்களை ரசித்து கேட்பேன். "நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு " என்ற வரிகள் ரொம்ப அற்புதமானது. நான் இன்று இன்டர்வியூ கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கடவுள் தான்.

    சினிமாவில் ஜெயிக்க வேண்டும்

    சினிமாவில் ஜெயிக்க வேண்டும்

    கேள்வி: சினிமாவில் ஜெயிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?

    பதில்: எனக்கு காமெடி என்றாலே பொதுவாக பிடிக்கும். இயக்குநர் நெல்சன் எழுதும் காமெடி பிடிக்கும் , நடிகர்கள் யோகிபாபு, வடிவேல், நாகேஷ் போன்ற ஜாம்பவான்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    நடிகர் சந்தானம் லொள்ளு சபாவில் நடித்தபோது அவரை எனக்கு பிடிக்கும். அப்போது நாமும் இது போல் நடிக்க வேண்டும் என்று தோன்றியது. அதுவும் நடந்தது. பின்னர் டிஜிட்டல் உலகமான யூடியூப்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதையும் செய்தேன். அனைத்திற்கும் ஒன்றே காரணம் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான்.

    பெண் பார்க்கும் படலம்

    பெண் பார்க்கும் படலம்

    கேள்வி: உங்களுக்கு எப்போது திருமணம்?

    பதில்: தற்போது எனக்கு பெண் பார்க்கும் படலம் அரங்கேறி வருகிறது. என்னை பொறுத்தவரை நல்ல குணமுள்ள பெண் கிடைத்தால் போதும். பணம், காசு எதுவும் தேவையில்லை. அவை அனைத்தையும் கடவுள் கொடுப்பார். எனது குடும்பம் என்னை பார்த்து சினிமாவில் உன்னால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்களோ, அது போன்று திருமணம் செய்ய வரும் பெண் கூறினால் இன்னும் நல்ல நிலைமைக்கு வருவேன். பெண் கொடுப்பவர்கள் சொந்த வீடு இருக்கா , காரு இருக்கா? என்று மட்டும் பார்க்கின்றனர். யாரும் மாப்பிள்ளையின் கேரக்டரை பார்ப்பதில்லை. கேரக்டரை பார்த்து பெண் கொடுங்கள். என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்கின்றனர். சினிமாவில் இருக்கிறேன் என்று கூறினால், திரும்பவும் என்ன வேலை செய்கிறீர்கள் என்கின்றனர். சினிமாவில் இருப்பதற்கு ஜெயிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவில் ஜெயித்தால் தான் அடுத்து அடுத்து வேலை வரும் .

    இப்படி பட்ட பொண்ணு தான் வேண்டும்

    சினிமாவை யாரும் வேலையாக கருதுவில்லை. அதில் கஷ்டமும் இருக்கிறது, வளர்ச்சியும் இருக்கிறது . என்னை கட்டிக்கிற பொண்ணு என்னை நம்பி, என் திறமையை நம்பினால் காலத்திற்கும் என்னால் அவர்களை சந்தோஷமாக வைத்து கொள்ள முடியும்.எப்படி பட்ட பொண்ணு வேண்டும் என்று யார் கேட்டாலும், இப்படி பட்ட பொண்ணு தான் வேண்டும் என்று சொல்லி வருகிறேன் .மேலும் அவர் கூறுகையில், நடிகர் அர்னால்டுடன் நடிக்க ஆசை என்று சிரித்தபடி தனது ஆசையை வெளி படுத்தினார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/c0VteY5TWQM இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். , யானை ஜோக் கதிர் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார் . மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    When is Yaanai Joke Kathir ? Reveals in Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X