Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூப்பர் ஸ்டார் கொடுத்த பணத்தை மறுத்த கவிஞர் பிறைசூடன் - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்
சென்னை: தமிழ் திரையுலகில் மிக முக்கியமான பாடலாசிரியர்களுள் ஒருவர் கவிஞர் பிறைசூடன்.
80'களில் இருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் 1500 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தன்னுடைய அனுபவம் குறித்து பலதரப்பட்ட விஷயங்களை ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில் பிறைசூடன் பகிர்ந்துள்ளார்.
சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் தமிழ் சினிமா.. பிரபலங்கள் இரங்கல்!
ஆட்டமா தேரோட்டமா
தன்னுடைய வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த பாடல் கேப்டன் பிரபாகரன் படத்தில் தான் எழுதிய ஆட்டமா தேரோட்டமா பாடல் என குறிப்பிட்டுள்ளார். கேப்டன் என்ற பெயருக்கு பின்னால் உள்ள சில பிரச்சனைகள் காரணமாக அந்த பாடலை ரேடியோவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
முக்கியமான பாடல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படத்தில் இடம்பெற்ற மீனம்மா மீனம்மா பாடல் இன்று வரையிலும் மிக பிரபலமான ஒன்று. அந்த பாடலை தான் எழுத எவ்வாறு வாய்ப்பு கிடைத்தது என்பதையும், அந்த பாடலுக்காக ரஜினி தனக்கு பரிசாக பணம் கொடுத்ததையும் அதனை தான் மறுத்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
கவிஞர் வாலி
தங்களுடைய முன்னோடிகளான முக்கிய பாடலாசிரியர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் என்ன என்பது குறித்த கேள்விக்கு, ஆலங்குடி சோமு, புதுமை பித்தன், முத்துலிங்கம் ஆகியோரிடம் கிடைத்த பாராட்டுக்களும் மற்றும் தந்தை ஸ்தானத்தில் வாலி வாழ்த்தியதையும் தான் பெரிய அங்கீகாரமாக பார்ப்பதாக கூறியுள்ளார்.
பிடித்த கவிஞர்
இந்த தலைமுறையில் தங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் யாரென்ற கேள்விக்கு, நா. முத்துக்குமார் அந்த இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்த வேளையில் காலம் நம்மிடம் இருந்து அவரை பறித்து கொண்டது என கூறியுள்ளார்.இன்னும் பலதரப்பட்ட விஷயங்களை இந்த பேட்டியில் ரீவைண்ட்செய்துள்ளார் கவிஞர் பிறைசூடன்