Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் ஏன் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன் தெரியுமா?: ஸ்ரீ ரெட்டி
Recommended Video
சென்னை: தான் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னை வந்ததில் இருந்து பேட்டிகள் கொடுப்பதில் படுபிசியாக உள்ளார்.
இந்நிலையில் அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
அமைதி
இந்த விஷயங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து பேசியுள்ளேன். பொறுமையாக இருந்தது தான் நான் செய்த தவறு. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்து வருடங்கள் ஓடிவிட்டன. அதனால் தான் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். தற்போது என் பொறுமையை இழந்துவிட்டேன்.
ஆண்கள்
பெண்களின் கற்போடு விளையாடுபவர்களை வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறேன். நான் பொறுமையை இழந்துவிட்டால் சுனாமி போன்றவள். யாராலும் சமாளிக்க முடியாது. பின்விளைவுகள் மோசமாக இருக்கும். பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
இயக்குனர்கள்
சினிமா துறையில் பெரிய ஆளாகத் துடிக்கும் நபர்களை தேடிப் பிடித்து படுக்கத் தான் இயக்குனர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஃபன் தான் முக்கியம். படுக்கைக்கு செல்பவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.
திறமை
இத்தனை ஆண்டுகளாக படுக்கையில் என் திறமையை காட்டினேன். தற்போது என் திறமையை சென்னையில் காட்டுவேன். என்னிடம் பணம் இல்லை. அதனால் யாராவது இலவசமாக என் வழக்கை நடத்த தயார் என்றால் நான் ரெடி. பாலியல் தொல்லை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முதலில் விரும்புகிறேன் என்றார் ஸ்ரீ ரெட்டி.