சூர்யாவிட்டுட்டு கார்த்திட்ட போனதேன்? சொல்கிறார் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு மஙகாத்தாவை முடித்த பிறகு சூர்யாவுடன் ஒரு 3டி படத்தில் பணிபுரிவதாக இருந்தது. ஆனால் திடீர் என்று அவர் அண்ணனை விட்டுவிட்டு தம்பி கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. கார்த்திக்கு ஜோடியாக சமந்தா தேர்வாகியுள்ளார்.
இப்படி திடீர் என்று கார்த்தியை வைத்து படம் எடுப்பதேன் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,
சூர்யா தற்போது படுபிசியாக உள்ளார். அதனால் தான் கார்த்தியை வைத்து புதுப்படத்தை துவங்குகிறேன். சூர்யா மாற்றான், சிங்கம் 2 ஆகிய படங்களை முடித்த பிறகு அவரை வைத்து புது படம் எடுப்பேன்.
பிரியாணி ஆக்ஷன், காமெடி, காதல் கலந்து சுவையாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் சுவையான பிரியாணியாக இருக்கும் என்றார்.
அவர் செய்யும் பிரியாணி சுவையாக வர வாழ்த்துக்கள்.
Comments


Click it and Unblock the Notifications