twitter
    Tamil»Movies»Airaa»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • யமுனாவை பவானி கொல்லத் துடிப்பதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. 'இதற்கெல்லாமா கொலை பண்ணுவாங்க' என்று தான் யோசிக்க வைக்கிறது. தில்லுக்கு துட்டு படத்தில் சந்தானம் பேசும் வசனம் தான் நியாபகத்துக்கு வருகிறது.

      இரண்டாம் பாதியை போல், முதல் பாதி படத்தின் திரைக்கதையும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். மேலும், க்ளைமாக்ஸ் காட்சியை மிக எளிதாக யூகித்துவிட முடிகிறது.

      நிறைய புதிய விஷயங்களை யோசிக்கும் சர்ஜுன் க்ளைமாக்ஸையும் புதிதாக யோசித்திருக்கலாம். ப்ளாஷ் பேக்கை பார்த்து பவானி மீது ஏற்படும் அனுதாபம், தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது போய் விடுகிறது. பாத்திரப் படைப்பில் செலுத்திய கவனத்தை, கதையிலும், திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் 'ஐரா'வை நாமும் தோளில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம்.