ஒரு பெண் தனது கணவனின் மரணத்திற்காக கேங்ஸ்டராக மாறி, கொலைகாரர்களை பழிவாங்கும் கதை தமிழுக்கு புதிது. அந்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் சி.வி.குமார். படத்தின் மேக்கிங் ஸ்டைலும், ராவான காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோயின் கதாபாத்திரத்தை மிக வலிமையானதாக படைத்திருக்கிறார் சி.வி.குமார்.
முதல் அரை மணி நேரக்காட்சிகள் மிக யதார்த்தமாக நகர்கிறது. அதற்கு அடுத்து, வழக்கமான கமர்சியல் சினிமா பாணியில் பயணிக்க தொடங்கிவிடுகிறது படம். இறுதி காட்சி வரை அந்த சினிமாத்தனம் தொடர்கிறது. திரைக்கதையில் நிறைய லாஜிக் ஓட்டைகள் வெளிப்படையாக தெரிகின்றன.
முதல் அரை மணி நேரக்காட்சிகள் மிக யதார்த்தமாக நகர்கிறது. அதற்கு அடுத்து, வழக்கமான கமர்சியல் சினிமா பாணியில் பயணிக்க தொடங்கிவிடுகிறது படம். இறுதி காட்சி வரை அந்த சினிமாத்தனம் தொடர்கிறது. திரைக்கதையில் நிறைய லாஜிக் ஓட்டைகள் வெளிப்படையாக தெரிகின்றன.