twitter

    கடிகார மனிதர்கள் கதை

    கடிகார மனிதர்கள் இயக்குனர் வைகறை பாலன் இயக்கத்தில் கிஷோர், லதா ராவ், கருணாகரன் மற்றும் பலர் நடித்த குடும்ப திரைப்படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். 

    கதை :

    சொந்த ஊரில் கடன்பட்டு வாழ வழியில்லாமல் பிழைப்பு தேடி சென்னை வரும் கிஷோர், கடைகளுக்கு ரொட்டி சப்ளை செய்யும் வேலை பார்க்கிறார். மனைவி லதா ராவ், இரு மகன்கள், ஒரு மகள் என மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் வாழ்க்கையை நடத்தும் கிஷோருக்கு, ஒருநாள் இரவு திடீரென குடியிருந்த வீட்டை காலி செய்யும் நிலை ஏற்படுகிறது.

    மினி லாரியில் சாமான் செட்டுகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குடும்பத்துடன் சென்னையின் சந்து பொந்துகளில் வீடு தேடுகிறார். ஆனால் வீடு கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு வழியாக புரோக்கர் ஒருவர் மூலமாக கிஷோருக்கு வீடு கிடைத்தாலும், ஒரு பிள்ளையை மறைத்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஹவுஸ் ஓனருக்கு தெரியாமல் எப்படி அவர் ஒரு பிள்ளையை மறைத்து வாழ்க்கை நடத்துகிறார் என்பதே கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie கடிகார மனிதர்கள் with us? Please send it to us ([email protected]).