twitter

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தின் கதை கந்துவட்டி கொடுமைக்கு எதிரானது. ஆனால் அதைவிட்டுவிட்டு, எங்கெங்கோ சென்று, எதை எதையோ பேசி திரும்புகிறார் இயக்குனர். அதனால் படம் பார்க்கும் போது அலுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. நல்ல கதை கருவை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு ஓவர் டோஸ் படத்தை எடுத்திருக்க வேண்டாம். ஆனால் மக்களை குழப்பியாவது படத்தின் சஸ்பென்சை க்ளைமாக்ஸ் வரை நீட்டித்திருக்கிறார் இயக்குனர்.

      படத்தில் வரும் பெரிய பெரிய வசனங்கள், கதை தேவையில்லாத தனி பிரச்சாரமாக மாறிவிடுகிறது. தற்போது வரும் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, மேக்கிங் விஷயத்தில் பெரும் சொதப்பல் யுரேகா. என்ன தான் இந்த காளி காட்டுப்பயலா இருந்தாலும், படம் பார்க்க வர்றவங்களையா இம்சை செய்வான். இருந்தாலும் நல்ல மெசேஜ் தான் சொல்கிறான் 'காட்டுப்பய சார் இந்த காளி'.