twitter

    ப.பாண்டி கதை

    ப.பாண்டி நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பான வொண்டர் பிலிம்ஸ் மூலம் தானே இயக்கி தயாரித்து நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தில், ராஜ்கிரண், நதியா, பிரசன்னா, சாயா சிங், ரேவதி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    கதை : 

    எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி முதல் அபிதாப் பச்சன் வரை அனைவருக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து தன் மகன் பிரசன்னாவை வளர்க்கிறார் ராஜ்கிரண். பிரசன்னா செட்டில் ஆனா பின்னர், அவரும் அவர் மனைவி சாயா சிங்கும் ராஜ்கிரணை ஒரு பொருட்டாக மதிக்காத நிலையில், அவர் தன் பேரன், பேத்திக்காக அந்த வீட்டில் வசிக்கிறார்.

    ஒரு கட்டத்தில் தனக்கான வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்று அவர் தன்னுடைய 21 -ம் வயதில் தொலைத்த காதலை தேடி தன்னுடைய 61 -வது வயதில் செல்கிறார். அவர் செல்லும் அந்த பைக் ஓட்டத்தில் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்..

    அதில் சிறு வயது ராஜ்கிரணாக தனுஷும், சிறு வயது ரேவதியாக மடோனாவும் வருகிறார். 

    ராஜ்கிரண் தன் முதல் காதலியை சந்தித்தாரா..? அந்த பிறகு என்ன ஆனது..? என்பதே விறுவிறுப்பும் உணர்ச்சியும் கலந்த மீதிக்கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie ப.பாண்டி with us? Please send it to us ([email protected]).