twitter

    ராஜா ராணி கதை

    ராஜா ராணி இது 2013ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அட்லீ குமார் எழுதி, இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஷங்கர் உடன் எந்திரன், நண்பன் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 27, 2013 அன்று வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் ராஜா ராணி என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 14 அன்று வெளியானது. காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பது தான் கதை.

    கதை:

    ஆர்யா, நயன்தாரா இருவருக்கும் காதல் தோல்வி ஏற்பட, ஒரு கட்டத்தில் இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், தங்களது பெற்றொர்களுக்காக திருமணம் செய்துகொள்ளும் இவர்கள் இல்லர வாழ்க்கையில் தடுமாற, இதற்கிடையில் இவர்களுடைய முந்தைய காதலைப் பற்றி இருவரும் அறிந்துகொள்கிறார்கள். பிறகு இவர்களுடைய தடுமாற்றம் நீடித்ததா அல்லது இவர்கள் இணைந்தார்களா என்பது தான் கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie ராஜா ராணி with us? Please send it to us ([email protected]).