twitter
    Tamil»Movies»Sethupathi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பக்கத்து வீட்டு இளைஞன் போல பாந்தமாக வந்து போய்க் கொண்டிருந்த விஜய் சேதுபதி, மெல்ல ரவுடியாக மாற முயற்சித்து, இப்போது அதிரடி போலீசாக அவதாரமெடுத்துள்ளார் சேதுபதியில்.

      சரி, எதிர்ப்பார்த்த வழக்கமான போலீஸ் கதைதானே.. இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? இருக்கிறது.... அது, விஜய் சேதுபதி.. விஜய் சேதுபதி மட்டும்தான்!

      வேல ராமமூர்த்திக்கு இதில் பிரதான வில்லன் வேடம். அந்த உருவத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் பொசுக்கென்று அமைந்துவிட்டது அவருக்கான க்ளைமாக்ஸ்.

      பண்ணையாரும் பத்மினியும் என்ற மகா சாதுவான படத்தைத் தந்த அருண் குமார், தனது அடுத்த படத்திலேயே ஆக்ஷனுக்குத் தாவியிருக்கிறார், பழக்கப்பட்ட திரைக்கதையுடன். இந்த போலீஸ் கதை விஜய் சேதுபதிக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம். ஆனால் மாதத்துக்கு நான்கு 'போலீஸ் சினிமா' பார்க்கும் தமிழ் சினிமா ரசிகனுக்கு?