twitter
    Tamil»Movies»Veeram»Story

    வீரம் கதை

    வீரம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித்குமாரும் கதாநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளனர்.

    கதை 

    ஒட்டன்சத்திரத்தில் அஜித்குமார் தன் தம்பிகள் நான்கு பேருக்காக அவர்களுடன் வாழ்கிறார். தான் திருமணம் செய்தால் தன்துணைவி தனக்கும் தன் தம்பிகளுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்திவிடுவார் என்று கருதுவதால் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவரின் தம்பிகள் அஜித்குமாருக்கு எப்படியாவது திருமணம் செய்து விடவேண்டும் என்று முயல்கிறார்கள். தமன்னாவை (கோப்பெருந்தேவி) தங்கள் வீட்டுக்கு அருகில் குடிவருமாறு செய்கிறார்கள். அஜித்குமாருக்கும் தமன்னாவுக்கும் காதல் மலர முயன்று அதில் வெற்றி பெறுகிறார்கள். அஜித்தும் அவர் தம்பிகளும் சண்டைகளில் ஈடுபடுபவர்கள். தமன்னாவுக்கும் அவர் தந்தை நாசருக்கும் சண்டை என்றாலே பிடிக்காது. தமன்னாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். நாசர் அங்கு சில நாட்கள் தங்கி திருவிழாவை பார்த்துவிட்டு செல்லும்படி சொல்கிறார். அங்கு நாசரை கொல்ல அதுல் குல்கர்னி அடியாட்களை வைத்து முயல்கிறார். இது தெரிந்த அஜித் எவ்வாறு நாசர் குடும்பத்தினரை காப்பாற்றினார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie வீரம் with us? Please send it to us ([email protected]).