twitter

    என்னை அறிந்தால் கதை

    என்னை அறிந்தால், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ஓர் அதிரடி தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இத்திரைப்படத்திற்கு தாமரை பாடல்வரிகள் அமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் முதலில் பெயரிடப்படாமல் தல 55 என்ற பெயரில் பிரபலமானது. பின்பு தான் என்னை அறிந்தால் என்ற பெயர் சூட்டப்பட்டது.

    கதை :

    இளம் வயதிலேயே அஜித்தின் அப்பா நாசர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். இதனை மனதில் வைத்து இதுபோன்ற ரவுடிகளை அளிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனராக வருகிறார் அஜித். சென்னையில் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கும் சுமனின் உடல் உறுப்புகள் செயல் இழந்துவிட்டதால், அவருக்கு வேறு ஒருவருடைய உடல் உறுப்புகளை பொருத்தியாகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.

    இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்று, பணம் சம்பாதிக்கும் கும்பலை சேர்ந்த அருண் விஜய்யின் கும்பலிடம், சுமனுக்கு மாற்று உறுப்புகளை கொண்டு வரும் பொறுப்பு தரப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து வரும் அனுஷ்காவின் உறுப்புகள் சுமனுக்கு பொருந்தும்படியாக இருப்பதால் அனுஷ்காவை கடத்த திட்டமிடுகின்றனர். இந்த கடத்தல் கும்பலின் திட்டத்தை தெரிந்துகொண்ட போலீஸ் கமிஷனரான அஜித், அனுஷ்காவை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie என்னை அறிந்தால் with us? Please send it to us ([email protected]).