சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!

அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.
இப்போது உலகில் அரிதாகி வரும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பம் தயார் செய்து வருகிறாராம் இந்த ஆஸ்கர் நாயகன். 3 இந்தி பாடல்களும், 2 ஆங்கில பாடல்களும் கொண்ட இந்த ஆல்பத்தில், தமிழுக்கு இடமில்லை என்பது கொஞ்சம் வருத்தமான சமாச்சாரம்தான்.
இவற்றில் 2 பாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்றிப் பாடுகிறார்.
ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தை படமாக்கிய பரத் பாலா இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளாராம். இந்த ஆல்பத்தை விரைவிலேயே வெளியிட இருக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications