Don't Miss!
- News விஜயகாந்த்தை "வட்டமிட்ட" பாஜக.. அவசர அவசரமா மோடி அப்படி சொன்னாரே, இப்ப என்னாச்சு? குழம்பும் தேமுதிக
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாடகர் மனோவின் இன்னிசை மழையில் நனைந்த துபாய் மக்கள்
விழாவிற்கு இந்திய சமூக நல மைய கன்வீனர் கே.குமார் தலைமை வகித்தார். முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக நடிகர் நிழல்கள் ரவி பங்கேற்று சிறப்புறை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அமரஜீவா, பாடகர் மனோ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முத்தமிழ்ச் சங்கத்தின் இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடகர் மனோவின் தலைமையில் நிழல்கள் ரவி, மாலதி, பூஜா, சுசித்ரா, சப்னம், சந்தோஷ், மனோவின் மகன் சாகிர் ஆகியோர் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். மனோவின் மகன் சாகிர் வெளிநாடுகளிலேயே துபாயில் தான் முதன் முதலாக ரசிகர்களுக்கு மத்தியில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் மற்றும் அர்விந்த் ஜோடி அரங்கம் அதிரும் வண்ணம் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கியது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமையில் பாரதி மோகன், ஷா, புகாரி, ரவி, சாதிக் பாட்சா, சையத் சர்தார் மற்றும் கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
லட்சுமி பிரியா மற்றும் அனு அசோக் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.