Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவுக்கு வெறும் தாடியோடுதான் வந்தேன்: டி. ராஜேந்தர்
"டூ" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ஆர் பேசியதாவது,
இந்த காலத்து இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஒரு காலத்தில் எந்த படமும் ஓடும். ஆனால் தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் மட்டுமே ஓடுகின்றன. தாய் பாசம், தங்கை பாசம்னு இப்போ படம் எடுத்தேனா அது ஓடுவது சந்தேகம் தான். டிவி சீரியல்களிலேயே அதையெல்லாம் சொல்லி விடுவதால் சினிமாவிலும் அதையே சொன்னால் எடுபடாது.
வீட்டில் போரடிக்கும்போது தான் இளைஞர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீரோயிசம், காமெடி கலந்த கதை தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக களவாணி படத்தைக் கூறலாம்.
தற்போது நான் எடுக்கும் ஒரு தலைக்காதலும் அந்த மாதிரியான படம் தான். அனைவரையும் கவரும். கடின உழைப்பு வீன்போகாது என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும். நான் சினிமாவுக்கு கோடியுடன் அல்ல வெறும் தாடியுடன் தான் வந்தேன்.
இன்றும் தாடியுடனே தான் இருக்கிறேன். வெற்றி என்னைத் தேடி வந்தது. என் உழைப்பால் தான் நான் இந்த தலைமுறைக்கும் ஏற்றவாறு இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் உழைக்கத் தயாராகுங்கள் என்றார்.
தாடியோட வந்தாலும் பலகோடி (ரசிகர்களை) சம்பாதித்த கில்லாடியாச்சே டி.ஆர்....!