twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவுக்கு வெறும் தாடியோடுதான் வந்தேன்: டி. ராஜேந்தர்

    By Sudha
    |

    T Rajendar
    நான் சினிமாவுக்கு கோடியோடு அல்ல வெறும் தாடியோடு தான் வந்தேன் என்று தன் ஸ்டைலில் கூறியுள்ளார் இயக்குனர் டி. ராஜேந்தர்.

    "டூ" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ஆர் பேசியதாவது,

    இந்த காலத்து இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஒரு காலத்தில் எந்த படமும் ஓடும். ஆனால் தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் மட்டுமே ஓடுகின்றன. தாய் பாசம், தங்கை பாசம்னு இப்போ படம் எடுத்தேனா அது ஓடுவது சந்தேகம் தான். டிவி சீரியல்களிலேயே அதையெல்லாம் சொல்லி விடுவதால் சினிமாவிலும் அதையே சொன்னால் எடுபடாது.

    வீட்டில் போரடிக்கும்போது தான் இளைஞர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீரோயிசம், காமெடி கலந்த கதை தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக களவாணி படத்தைக் கூறலாம்.

    தற்போது நான் எடுக்கும் ஒரு தலைக்காதலும் அந்த மாதிரியான படம் தான். அனைவரையும் கவரும். கடின உழைப்பு வீன்போகாது என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும். நான் சினிமாவுக்கு கோடியுடன் அல்ல வெறும் தாடியுடன் தான் வந்தேன்.

    இன்றும் தாடியுடனே தான் இருக்கிறேன். வெற்றி என்னைத் தேடி வந்தது. என் உழைப்பால் தான் நான் இந்த தலைமுறைக்கும் ஏற்றவாறு இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் உழைக்கத் தயாராகுங்கள் என்றார்.

    தாடியோட வந்தாலும் பலகோடி (ரசிகர்களை) சம்பாதித்த கில்லாடியாச்சே டி.ஆர்....!

    English summary
    Actor, director T. Rajendar has told that he has entered the cine field with just beard and not with crores of rupees. Young generation likes movies with equal mixture of love, heroism and comedy, he added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X