Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்… 5 மொழிகளில் வெளியானது ‘‘வாடா தம்பி“ பாடல் !
சென்னை : எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலான வாடா தம்பி பாடலின் லிரிக் வீடியோ அனைத்து மொழிகளிலும் வெளியானது.
தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கையை புடி தங்கமே.... கொண்டாட்ட வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்
எதற்கும் துணிந்தவன்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பொள்ளாச்சி விவகாரம்
பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
5 மொழிகளில்
இதையடுத்து, எதற்கும் துணிந்தவன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அனைத்து மொழிகளிலும்
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலான வாடா தம்பி பாடலின் லிரிக் வீடியோ அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு இத்திரைப்படம் வெளியாக உள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.