Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்: கானா பாலாவின் ஸ்டெர்லைட் பாடல்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 100 நாட்கள் அமைதியாக போராட்டம் நடந்தது. 100வது நாள் போராட்டத்தின்போது போலீசார் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 17 வயது பள்ளி மாணவி, 19 வயது கல்லூரி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்களை சுட்டுக் கொல்ல போலீசாருக்கு அனுமதி அளித்தது யார் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார். "என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம் தூத்துக்குடி ஊருல ஸ்டெர்லைட் ஆலைய மூட சொல்லி நடத்துனாங்க போராட்டம்
100 நாள் அங்க அமைதியாக நடந்தது ஆர்ப்பாட்டம் அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான் அப்பாவி மக்களை தான் சிட்டுக் குருவி போல் சுட்டுக் கொன்னுட்டான்' என்ற பாடல் கேட்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளது.