Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்.. நேரலையில் பாடிய ஜீவி பிரகாஷ் !
சென்னை: நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜீவி.பிரகாஷ், ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களை யூடியூப் நேரலையில் பாடினார்.
Recommended Video
நேரலையை ஆரம்பிக்கும் முன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்ட ஜீவி.பிரகாஷ் தான் அசுரன் படத்தில் இருந்து எள்ளு வாய பூக்களையே பாடலின் மூலம் பாடல் செஸ்ஸன் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் இந்த நேரலையில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்பதிற்கேற்ற பாடலை கேளுங்கள் என கூறியிருந்தார்.
ரசிகர்களும் ஜீவி.பிரகாஷ் கேட்டு கொண்டதற்கு இணங்க தங்களின் விருப்பமான பாடல்களை பாடுமாறு நேரலையில் கேட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த நேரலையில் ரசிகர்கள் கேட்ட அனைத்து பாடல்களையும் தனது வீட்டில் இருந்த படியே டிஜிட்டல் இசை கருவிகளின் உதவியோடு பாடி அசத்தினார்.
சூர்யாவை சுற்றிய திடீர் சோதனை.. சமூக வலைதளங்களில் ஆதரவு கரம் நீட்டும் ரசிகர்கள்.. #அன்புள்ளசூர்யா
இந்த பாடல் செஸ்ஸனுக்கு பின்பு இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷை ரசிகர்கள் வாழ்த்தி நன்றி தெரிவித்தனர். தாங்கள் கேட்ட பாடல்களை பொறுமையாக பாடியதற்கு நன்றி தெரிவித்தும் ஜீவி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் சூரரைப்போற்று படத்திற்கு வாழ்த்தும் தெரிவித்தனர் .
ஜீவி.பிரகாஷ் நேரலை இசை செஸ்ஸனை அவ்வளவாக நடத்துவதில்லை மிகவும் ரேர் தான். இந்த கொரன்டைன் நேரத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தற்போது நேரலையில் வந்து இசை விருந்து கொடுத்து இருக்கிறார்.
இந்த கொரன்டைன் நேரத்தில் பல பிரபலங்களும் நேரலையில் வந்து தங்களின் பொன்னான நேரத்தை தங்கள் ரசிகர்களுடன் உரையாடி செலவிட்டு வருகின்றனர்.
கொரோனா ஏற்படுத்திய தாக்கம் அனைவரையும் வீட்டில் அடைத்துள்ளது சக நண்பர்களையும் உறவுகளையும் காண முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் பலரும் வீடியோ மூலமே தான் தங்களின் பிடித்தமானவர்களுடன் உரையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.