Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோவையில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி.. நடத்துகிறார் கார்த்திக் ராஜா!
மதுரையைத் தொடர்ந்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கோவையிலும் நடத்துகிறார் அவர் மகன் கார்த்திக் ராஜா.
இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார்.
மதுரையில்...
தனது அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடந்த ஆண்டு மதுரையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இளையராஜாவும் பங்கேற்றார். பல பாடல்களை அவர் பாடினார். மதுரை நகரமே ஸ்தம்பிக்கும் அளவு கூட்டம் கூடியது.
கோவையிலும்...
இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது கோயம்புத்தூரிலும் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை நடத்த கார்த்திக் ராஜா முடிவெடுத்துள்ளார். இதனை கார்த்திக் ராஜாவே அறிவித்திருக்கிறார்.
வேண்டுகோள்
அவர் கூறுகையில், "மதுரையில் கடந்த வருடம் நடந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நிறைய பேர் கோயமுத்தூரிலும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். தற்போது இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இந்த இசை நிகழ்ச்சியில் நல்ல திறமையான பாடகர்களை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது," என்றார்.
இசையமைப்பிலும்...
தற்போது கார்த்திக் ராஜா இசையில், ‘கடை எண் 6', ‘வாராயோ வெண்ணிலவே', ‘சகாப்தம்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் சகாப்தம் படம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.