Don't Miss!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- News சிறைக்குள் "பலே பிளான் போட்டு" மாம்பழங்களை அதிகம் சாப்பிடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'கத்தி' இசையில் விஜய் ரசிகர்களுக்கு நிறைய 'சர்பிரைஸ்' உண்டு: ஆவலைத் தூண்டும் அனிருத்
சென்னை: கத்தி பட இசை ஆல்பத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஏராளாமான ஆச்சரியங்கள் காத்திருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. படம் பிரச்சனையை எல்லாம் தாண்டி தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
படத்தில் விஜய் தனது சொந்த குரலில் டூயட் பாடுகிறார். இந்நிலையில் இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் கூறுகையில்,
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p><a href="https://twitter.com/hashtag/Kaththialbum?src=hash">#Kaththialbum</a> update.. <a href="http://t.co/UnseF9Teat">pic.twitter.com/UnseF9Teat</a></p>— Anirudh Ravichander (@anirudhofficial) <a href="https://twitter.com/anirudhofficial/statuses/500968367369359361">August 17, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
கத்தி இசை வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் காத்துள்ளன. விஜய் சார் பாடும் பாடல் தயாராகிவிட்டது. விரைவில் அவரை பாட வைத்து அதை பதிவு செய்வேன். படத்தின் இசையை செப்டம்பர் மாதம் மத்தியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் தேதியை அறிவிப்போம். கத்தி இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் அனைவரும் ஆவலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவதால் தான் இத்தனை பிரச்சனைகளும். ஆனால் தயாரிப்பாளர் வெளிநாட்டில் வாழும் ஈழத் தமிழர், அவருக்கும் ராஜபக்சேவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.