Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஒத்திகைக்கு லேட்டா வந்த டான்சரை தனது கால்களை முத்தமிட வைத்த மடோனா
நியூயார்க்: பாப் பாடகி மடோனா நடன நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு தாமதாக வந்த டான்சர் ஒருவரை தனது கால்களை முத்தமிட வைத்துள்ளார்.
பாப் உலகின் ராணியாக பல காலமாக இருப்பவர் மடோனா. வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர். அவர் தற்போது ரெபெல் ஹார்ட் டூர் நிகழ்ச்சியில் உள்ளார். அதாவது பல நகரங்களுக்கு தனது குழுவுடன் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் நியூயார்க் நகரில் இசை நிகழ்ச்சி நடத்த ஒத்திகை நடத்தியுள்ளார்.
டான்சர்
மடோனாவின் குழுவைச் சேர்ந்த ஆண் டான்சர் ஒருவர் ஒத்திகைக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். தாமதமாக வந்ததற்கு அவர் மாய்ந்து மாய்ந்து மடோனாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
மடோனா
குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியாதா என்று கோபப்பட்ட மடோனா அந்த டான்சருக்கு தண்டனை அளித்துள்ளார். அதாவது அனைவர் முன்பும் தனது கால்களை முத்தமிட வைத்துள்ளார்.
முத்தம்
என் கால்களை முத்தமிடு என்று மடோனா அந்த டான்சரிடம் கூறியதும் அனைவரும் அவர் உண்மையாக கூறுகிறாரா அல்லது ஜோக் அடிக்கிறாரா என்று தெரியாமல் இருந்துள்ளனர்.
தண்டனை
மடோனா தனது கால்களை முத்தமிடுமாறு கூறியதும் டான்சரோ சற்றும் தாமதிக்காமல் அவர் கூறியவாரே செய்துள்ளார். இதை பார்த்த பிற டான்சர்கள் இனி தாமதமாக வரவே கூடாது என்று தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொண்டனர்.