Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்று மதியம் 1மணிக்கு..யூடியூப் நேரலையில் அனிரூத்தின் இசை நிகழ்ச்சி!
சென்னை : இசையமைப்பாளர் அனிரூத் யூடியூப்பில் நேரலையில் இசை நிகழ்ச்சி ஒன்றை இன்று மதியம் 1மணிக்கு நடத்த உள்ளார். இதை பற்றிய அறிவிப்பை தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிரூத் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் அடிக்கடி நேரலையில் வந்து ரசிகர்களுடன் பல தகவலை பகிர்ந்து கொள்வார். அனிரூத் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவிலும் இசையமைத்து வருவதால் இவரின் சமூக வலைத்தள பக்கங்களுக்கு பல தெலுங்கு சினிமா ரசிகர்களும் வந்து தங்களின் அன்பை பகிர்வது வழக்கமாய் வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிக படியான ரசிகர்கள் இருக்கும் ஒரு முக்கிய இசையமைப்பாளராக அனிரூத் உருவாகியிருக்கிறார்.
தற்போது கொரோனா சமயத்தில் மக்களை மனதைரியத்துடன் வைத்து கொள்ள பல பிரபலங்களும் முயற்சி செய்து வருகின்றனர். பலரும் தங்களின் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பல விஷயங்களை மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இதன் வாயிலாக மக்களை வீட்டில் இருந்த படியே உற்சாக படுத்த அனிரூத்தும் களம் இறங்கியுள்ளார் .
இன்று மதியம் 1மணிக்கு யூடியூப்பில் நேரலையில் வந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் அனிரூத். இந்த நிகழ்ச்சிக்கு "ஒன் நேசன்" என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது. இந்த நேரலையில் இந்தியாவின் பிரபலமான யூடியூப்பர்கள் மற்றும் பல முக்கிய கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அனிரூத் தெரிவித்து இருக்கிறார் .
மேலும் இந்த நேரலை இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் பணத்தை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு அளிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். அனிரூத் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு திரையுலகத்தில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அனிரூத் எத்தனையோ பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல முக்கிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இவரின் இசை நிகழ்ச்சி உலகின் எந்த மூலை முடுக்கில் நடந்தாலும் அங்கு இவருக்கென ரசிகர்கள் வந்து குவிந்து விடுவார்கள். இது பெரிய இசையமைப்பாளர்களுக்கே சாத்தியமான விஷயம் ஆனால் அனிரூத்திற்கு மிக சிறிய கால கட்டத்தில் நடந்தது அனிரூத்தின் திறமையை குறிக்கிறது.
Recommended Video
அனிரூத்தின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்பதனால் இந்த நேரலை இசை நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் இணையத்தில் ஒரு மணிக்கு கூடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது இதே நேரத்தில் உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காணும் போது நல்ல நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.