ட்ரிபிள் வி ரெகார்ட்ஸ் - வசந்தகுமாரின் மகன் தொடங்கியுள்ள புதிய ஆடியோ நிறுவனம்!
சென்னை: ட்ரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பெயரில் புதிய ஆடியோ நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் வ வினோத்குமார்.
இவர் வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் அதிபர் வசந்த குமாரின் இளைய மகன், நடிகர் வசந்த் விஜய்யின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் சார்பில் முதலில் விழியும் செவியும் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள இந்த ஆல்பத்தில் முறையே 9 மற்றும் 13 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பிரேம்ஜி அமரன், யூசுப் இருவரும் முதல் ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளனர்.

இரண்டாவது ஆல்பத்துக்கு பிரேம்ஜி, யூசுப்புடன் மலேசியாவைச் சேர்ந்த சத்யாவும் இணைந்து இசை அமைத்துள்ளார்.
அடுத்து தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் மற்றும் என்னமோ நடக்குது ஆகிய இரு படங்களின் இசைத் தட்டுகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படங்களின் ஹீரோ வசந்த் விஜய், தயாரிப்பாளர் வினோத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களைத் தவிர, மேலும் இரு புதிய படங்களின் இசைத் தட்டுக்களையும் வெளியிடவிருக்கிறது ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம்.
சினிமா இசை தவிர, தனியிசை ஆல்பங்களையும் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது ட்ரிபிள் வி ரெக்கார்ட்!


Click it and Unblock the Notifications











