Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
2017-ன் நம்பர் 1 ஆல்பம்... சோனி மியூசிக் அறிவித்த ரஹ்மான் படம் எது தெரியுமா?
சென்னை : 2017-ம் வருடத்தின் சிறந்த ஆல்பம் எது என்ற தகவலை சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல பெரிய படங்களின் பாடல்களை வாங்கியுள்ள இந்த நிறுவனம் விஜய் நடித்த மெர்சல் படத்தினையும் வாங்கி இருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'மெர்சல்' ஆல்பம் தான் கடந்த வருடத்தில் நம்பர் 1 ஆல்பம் என சோனி மியூசிக் நிறுவனம்தெரிவித்துள்ளது.
|
ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'இன்று நேற்று நாளை' என்ற பெயரில் நேற்று நடத்திய இசை விழாவில் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வந்தபோது ரசிகர்கள் மத்தியில் மெர்சலான வரவேற்பு கிடைத்தது.
|
பாடல் செம ஹிட்
'ஆளப்போறான் தமிழன்' பாடல் உலகம் முழுவதும் இவ்வளவு பிரம்மாண்ட ஹிட் ஆனதற்கு காரணமான தளபதி விஜய்க்கு ரஹ்மான் மேடையிலேயே நன்றி கூறினார். விஜய் ரசிகர்கள் பலத்த கைதட்டலோடு நன்றியை வெளிப்படுத்தினர்.
நம்பர் 1 ஆல்பம்
கடந்த வருடத்தின் நம்பர் 1 ஆல்பமான 'மெர்சல்' திரைப்படத்திற்கு இசையமைத்ததற்கான விருது சென்னை YMCA-வில் நேற்று நடந்த கான்சென்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
மெர்சல் ஹிட்
'மெர்சல்' பாடல்கள் ஒவ்வொன்றும் வெளியானது முதல் செம ட்ரெண்டாகின. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய்யின் திரைப் பயணத்தில் 25-வது வருடம் இருவரும் இணைந்த மெர்சல் ஆல்பம் மெர்சல் ஹிட் அடித்ததால் ரசிகர்கள் உற்சாக கொண்டாடி வருகிறார்கள்.