Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
சென்னை: வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. ஐக் இயக்கியுள்ள இந்த படத்தை அட்லீ தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசும்போது,
ஜீவா
ஜீவா என் முதலாளி. அவரின் அப்பா ஆர்.பி. சவுத்ரி சாரால் தான் ராதாரவி ஒரு நேரம் சாப்பிடுகிறான். ஸ்ரீதிவ்யா தேங்ஸ் மட்டுமே சொல்லிட்டு போச்சு.
சினிமா
எனக்கு பிறகு என் மகன் உள்ளான். அவனிடம் சினிமா என்றாலே 8 மைல் ஓடுகிறான். அய்யய்யே என்கிறான். அப்படி எல்லாம் சொல்லாதடா என்று கூறியுள்ளேன். சினிமாவில் நன்றி கெட்ட பயலுக நிறைய இருக்காங்கன்னு அவன் தெரிஞ்சுக்கிட்டான்.
சரவணா ஸ்டோர்ஸ்
வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று. சினிமா கெட்டுப் போச்சு என்ன செய்ய.
படம்
சங்கிலி புங்கிலி கதவை தொற படம் ஓஹோன்னு ஓடும் என்பதை தயாரிப்பாளரிடம் கூறிக் கொள்கிறேன். எங்கப்பா தமிழ்நாடு பூரா பரப்பியுள்ளார் குடும்பத்தை.
விஸ்வரூபம்
கமல் ஹாஸனை அழ வைத்த ஒரே படம் விஸ்வரூபம். அவர் டிவியில் அழுததை சொன்னேன். அதை சொல்றேன். நான் அந்த ஆள் அழுது பார்க்க முடியாது. நான் பால்ய சினேகிதன். நன்றி உள்ளவன் என்றார் ராதாரவி.