Don't Miss!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
சென்னை: வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. ஐக் இயக்கியுள்ள இந்த படத்தை அட்லீ தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசும்போது,
ஜீவா
ஜீவா என் முதலாளி. அவரின் அப்பா ஆர்.பி. சவுத்ரி சாரால் தான் ராதாரவி ஒரு நேரம் சாப்பிடுகிறான். ஸ்ரீதிவ்யா தேங்ஸ் மட்டுமே சொல்லிட்டு போச்சு.
சினிமா
எனக்கு பிறகு என் மகன் உள்ளான். அவனிடம் சினிமா என்றாலே 8 மைல் ஓடுகிறான். அய்யய்யே என்கிறான். அப்படி எல்லாம் சொல்லாதடா என்று கூறியுள்ளேன். சினிமாவில் நன்றி கெட்ட பயலுக நிறைய இருக்காங்கன்னு அவன் தெரிஞ்சுக்கிட்டான்.
சரவணா ஸ்டோர்ஸ்
வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று. சினிமா கெட்டுப் போச்சு என்ன செய்ய.
படம்
சங்கிலி புங்கிலி கதவை தொற படம் ஓஹோன்னு ஓடும் என்பதை தயாரிப்பாளரிடம் கூறிக் கொள்கிறேன். எங்கப்பா தமிழ்நாடு பூரா பரப்பியுள்ளார் குடும்பத்தை.
விஸ்வரூபம்
கமல் ஹாஸனை அழ வைத்த ஒரே படம் விஸ்வரூபம். அவர் டிவியில் அழுததை சொன்னேன். அதை சொல்றேன். நான் அந்த ஆள் அழுது பார்க்க முடியாது. நான் பால்ய சினேகிதன். நன்றி உள்ளவன் என்றார் ராதாரவி.