Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்ணீருடன் விடைப் பெற்றார் 'இசையரசி' எஸ் ஜானகி!
Recommended Video
மைசூரு: சினிமா, மேடைக் கச்சேரி அனைத்திலுமிருந்து ஓய்வு பெற்றதாக கண்ணீருடன் அறிவித்தார் இசையரசி எஸ் ஜானகி.
இந்திய சினிமாவில் மிக அதிகம் பாடிய பாடகிகளுள் ஒருவர் எஸ் ஜானகி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக
1952-ல் தொடங்கிய எஸ்.ஜானகியின் இசைப் பயணம் கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது. பல குரல் வித்தகியாகத் திகழ்ந்தார். இவருக்கு இணையான இன்னொரு குரலைச் சொல்வது கடினம். அப்படியொரு இனிய, பாவமிக்க குரலுக்குச் சொந்தக்காரர் ஜானகி.
பாடுவதை நிறுத்தினார்
சில ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஜானகி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டார். மேடைக் கச்சேரிகளையும் குறைத்துக் கொண்டார். டெலிவிஷன் ஷோக்களில் மட்டும் எப்போதாவது தோன்றுவார்.
ஓய்வு பெறுகிறேன்
80 வயதை கடந்த எஸ்.ஜானகி தனது முதுமை காரணமாகவும் இளையவர்களுக்கு வழி விடுவதற்காகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.
கடைசி கச்சேரி
இந்த நிலையில் மைசூரில் எஸ்.ஜானகியின் கச்சேரியை நடத்த தொழிலதிபர் மனுமேனன் ஏற்பாடு செய்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் ஜானகி ஒப்புக் கொண்ட கச்சேரியாம் இது.
இசைமழை
இதைதொடர்ந்து நேற்று மைசூருமான கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில் எஸ்.ஜானகியின் இசைக் கச்சேரி நடந்தது. சுமார் 4 மணிநேரம் இன்னிசை மழை பொழிந்தது. மிகவும் உணர்வுப்பூர்வமாக கண்ணீர் மல்க அவர் பாடல்களைப் பாடினார். சூரு ராஜ குடும்பத்தினர், கன்னட திரையுலக நடிகர், நடிகைகள் என்று பலரும் இதில் பங்கேற்றனர்.
இனி பாடமாட்டேன்
இறுதியில் கண்ணீருடன் விடை கொடுத்தார் எஸ் ஜானகி. இதுதான் தனது கடைசி இசை நிகழ்ச்சி என்றும் இனி சினிமாவிலும் பாடப் போவது இல்லை என்று கூறியபோது அவரது ரசிகர்களில் பலர் அழுதுவிட்டனர்.