twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரெக்கார்டிங் தியேட்டரில் மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்

    By Siva
    |

    பாடகி கே. எஸ். சித்ரா தனது மகள் நந்தனா இறந்த பிறகு சில மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் பாடத் துவங்கியுள்ளார். ஆனால் ரெக்கார்டிங் தியேட்டரில் பாடிக் கொண்டிருக்கையிலே சோகம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி பாடகி கே. எஸ். சித்ரா. தமிழ் ரசிகர்கள் அவரை அன்பாக சின்னக் குயில் என்றே அழைக்கின்றனர். பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் அவர் தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இது வரை 15 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 6 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் விஷு அன்று துபாயில் சித்ராவின் ஒரே மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். இதையடுத்து பாடுவதை நிறுத்தினார் சித்ரா.

    இந்நிலையில் மலையாளத்தில் தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைப் பற்றி ஒரு பாடல் பாட சித்ராவை அணுகினர். பாசத்திற்காக ஏங்கும் அவர் உடனே ஒப்புக் கொண்டார். ஷஇஷம் + ஸ்நேகம் = அம்மா என்ற படத்தில் தான் அந்த பாடல் வரவிருக்கிறது.

    சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் அந்த பாடலை பாடிக் கொண்டிருக்கையில் நந்தனா நினைவு வரவே அவர் கதறி அழுதார். அவர் அழுகை அங்குள்ளவர்களை கலங்கச் செய்தது.

    English summary
    Famous playback singer K.S. Chitra got emotional in the recording theatre when she was singing a song about mother's love. Chitra's only daughter Nandana got drowned in a swimming pool in Dubai in april.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X