Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
மூச்சு விடாமல் எஸ்.பி.பி தெலுங்கில் பாடி கேட்டு இருக்கீங்களா? மோகன்லால் ஷேர் செய்த வீடியோ!
திருவனந்தபுரம்: மறைந்தாலும் அனைவர் மனதிலும் மறையாமல் உள்ளுக்குள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரலாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்போதும் நம் நினைவுகளில் கலந்து இருக்கிறார்.
"மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என வெறும் எதுகை மோனைக்காக பாடவில்லை. உண்மையிலேயே இசையாக தான் நாளும் இசை ரசிகர்களின் செவிகளில் இன்பத் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
அவரது மறைவை இன்னமும் நம்ப முடியாமல் தான் பலரும் உள்ளனர். எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் முதலாம் நினைவு ஆண்டை முன்னிட்டு மூச்சு விடாமல் எஸ்.பி.பி தெலுங்கில் பாடிய பாடல் வீடியோவை நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஒரு வருஷம் ஆகிடுச்சு
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு என்பதை நம்ப மனம் இன்னமும் மறுக்கத்தான் செய்கிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அவரது நினைவுகளில் மூழ்கி திளைத்து வருகின்றனர்.
Remembering 1st year Anniversary of The Legend - #SPBalasubrahmanyam Sir.. 🥺🥺 That Voice... 🎶 It Hurts.. 💔 You r always living in everyone's hearts through your Voice Sir... ❤️ pic.twitter.com/pd6fSOI8UF
— Ajinesh2703 (Ajinesh4) September 24, 2021
டிரெண்டிங்கில் எஸ்.பி.பி
#SPBalasubrahmanyam எனும் ஹாஷ்டேக் காலை முதலே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை இன்றைய தினத்தில் நினைத்து அவரது இழப்பை எண்ணி வருந்தி வருகின்றனர். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அரிய புகைப்படங்கள் மற்றும் பாடல்கள் அதிகளவில் இந்த ஹாஷ்டேக்கில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
உருகும் மோகன்லால்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, இந்தியாவின் எண்ணற்ற மொழிகளில் அதிக பாடல்களை பாடியுள்ளார். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் எஸ்.பி.பியை நினைத்து உருகி மோகன்லால் போட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
In our hearts forever and always with his celestial voice that remains unparalleled. Remembering #SPBalasubrahmanyam Sir on his First Death Anniversary. pic.twitter.com/W2Rvs9YFwf
— Mohanlal (Mohanlal) September 25, 2021
மூச்சு விடாமல் தெலுங்கில்
"மண்ணில் இந்த காதலன்றி" பாடலில் மூச்சு விடாமல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் "முத்து மணி ரத்தினங்களில்" என ஆரம்பித்து பாடியதை பார்த்து பல முறை ரசித்து இருப்போம். அதே பாடலை தெலுங்கு மொழியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மொபைல் வீடியோவில் பாடி இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார் மோகன்லால்.
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!