Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவை ஒன்றிணைப்போம்..ஒன் நேஷன் ஒன் வாய்ஸ்.. மே 3ந் தேதி சங்கீத் சேது!
சென்னை : மே 3தேதி ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் என்ற இசை நிகழ்ச்சி இணையம் மற்றும் தொலைகாட்சியின் வாயிலாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்வில் இந்தியாவின் மிக சிறந்த 100பாடகர்கள் 14 மொழிகளின் வழியாக பாடல்களை பாடியுள்ளனர்.
பிரபல பின்னணி பாடகியான கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு விளம்பர காணொளியை பகிர்ந்து இருக்கிறார். ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் என்ற இசை நிகழ்ச்சி மே 3ந் தேதி ஒளிப்பரப்ப உள்ளதை அதில் குறிப்பிட்டுள்ளார்கள் மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் இந்தியாவின் தலை சிறந்த 100பாடகர்கள் பாடியிருப்பதையும் கூறியுள்ளார்கள் .
சங்கீத் சேது என்ற இசை நிகழ்ச்சி ஏப்ரல் 10,11 மற்றும் 12 நடந்தது இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்ற முக்கிய பாடகர்கள் 18பேர் இணைந்து இசை நிகழ்வில் வீட்டில் இருந்தே படியே பாடினர். இந்த நிகழ்ச்சி இணையத்தில் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் இருந்து சுமார் 23கோடிக்கும் அதிகமான மக்கள் இணையத்தின் வாயிலாக பார்த்து மகிழ்ந்தனர்.
இதை தொடர்ந்து 100சிறந்த பாடகர்கள் இணைந்து சங்கீத் சேதுவின் தொடர்சியாக ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் நிகழ்வில் முக்கிய பாடகர்களின் ஆசியின் கீழ் பாடியிருக்கின்றனர். இந்த இசை நிகழ்ச்சி தொலைகாட்சி, சமூக வலைத்தளம், இணையதளம் மற்றும் ஓடிடி ஆகிய அனைத்து வகையான வழியிலும் மக்களை சென்றடைய உள்ளது. இதிலிருந்து வரும் தொகை முழுவதும் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க பட உள்ளது.
இந்த ஒன் நேஷன் ஒன் வாய்ஸ் நிகழ்ச்சியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பாடல் ஒன்றை 100பாடகர்களும் அவரவர்கள் வீட்டில் இருந்த படியே பாடி உள்ளனர். இந்தியாவின் சிறந்த பாடகர்களான கே.எஸ்.சித்ரா, சங்கர் மஹாதேவன், அசா போஸ்லே, ஹரிஹரன், கைலாஷ் கீர், உதித் நாராயணன் போன்ற முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், 14 மொழிகளில் இதை பாடி உள்ளனர் . ஹிந்தி , பெங்காலி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்பூரி, அசாமிஸ், காஷ்மீரி, சிந்தி, ராஜஸ்தானி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் பாடி உள்ளனர்.
Recommended Video
இந்த நிகழ்வை இந்திய சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன் நிறுவனம் எடுத்து நடத்தியுள்ளது. இந்த நிகழ்வை பாடகர்கள் சோனு நிகாம், ஶ்ரீனிவாஸ் மற்றும் சஞ்சய் தன்டான் ஆகியோர் தங்களின் பெரும் முயற்சியால் ஒருங்கிணைத்து உள்ளனர்.