Don't Miss!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அர்ஜுன் ரெட்டியை மிஞ்சிய பாலாவின் வர்மா...'வானோடும் மண்ணோடும்' பாட்டை பாருங்க தெரியும்!
வர்மா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சென்னை: வர்மா படத்தின் முதல் பாடலான வானோடும் மண்ணோடும் பாடல் வெளியாகியுள்ளது.
தெலுங்கி சூப்பர் டூப்பர் ஹிட் படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக் தான் வர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தினை பாலா இயக்குகிறார்.
இப்படத்துக்கு ரதன் இசையமைத்துள்ளார். மேகா சவுத்திரி, ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வானோடும் மண்ணோடும்
இப்படத்தின் முதல் பாடலான வானோடும் மண்ணோடும் பாடல் நேற்று இரவு வெளியானது. இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். கிட்டதட்ட நான் கடவுள் படத்தில் வரும் பிச்சை பாத்திரம் பாடலை போன்று இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
சிவன் சிலை
பாடலின் துவக்கத்தில் பிரமாண்ட சிவன் சிலை காட்டப்படுகிறது. அதன் பின்னர் துருவ் விக்ரமின் பயணக் காட்சிகள் புகைப்படங்களாக இடம்பெறுகின்றன. பார்ப்பதற்கும், கேட்பதற்கும் பாடல் இனிமையாக இருக்கிறது.
பாலா ஸ்டைல்
பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும் போது இது அக்மார்க் பாலா படம் என்பது தெளிவாகிறது. என்ன தான் ரீமேக்காக இருந்தாலும், பாலாவுக்கு என ஒரு ஸ்டைல் இருக்கும். அது இதில் தெளிவாக தெரிகிறது.
அர்ஜுன் ரெட்டி பார்த்தவர்கள்...
அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்தவர்களுக்கு வர்மா பாடல் காட்சிகளை பார்க்கும் போது இது நிச்சயம் தெரியும். ஏனென்றால் அந்த படத்தில் மதம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான விஷயங்கள் எதுவும் இடம்பெறாது.