நானாகிய நதி மூலமே.. கமலின் வரிகள், குரலில் வெளியான விஸ்வரூபம்-2 பட பாடல்!
சென்னை: விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடபட்டுள்ளது.
கடந்த 2013ல் பல பிரச்சனைகளுக்கு இடையில் விஸ்வரூபம் பத்ம வெளியானது. அப்போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. சில முக்கியமான சஸ்பென்ஸ்களுடன் முதல் பாகம் முடிவடைந்தது.

இந்த நிலையில் விஸ்வரூபம்-2 விரைவில் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி விஸ்வரூபம்-2 வெளியாகி உள்ளது.
இரண்டு வாரம் முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் இப்போது விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடபட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தொடர்ந்து மூன்றாவதாக இருவரும் சேர்ந்து பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நானாகிய நதி மூலமே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
உன்னை காணாது என்று விஸ்வரூபம் முதல் பாகத்தில் வெளியான பாடல் போலவே இந்த பாடலும் இருக்கிறது. இந்த பாடலையும் கமலே பாடியுள்ளார். கமலுடன் கவுசிகி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர் பாடியுள்ளனர். பாடலை கமலே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











