Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நட்புதான் பர்ஸ்ட்.. பணமெல்லாம் அடுத்துதான்.. யுவன் சங்கர் ராஜா ஓபன் டாக்
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் பேய்பசி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
Recommended Video
சென்னை: யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பேய் பசி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஹாரர் த்ரில்லர் படமாக பேய்பசி திரைப்படம் உருவாகியிருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள்ளேயே நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
இத்திரைப்படத்தை நலன்குமாரசாமியுடன் சேர்ந்து திரைக்கதை அமைத்து ஸ்ரீநிவாஸ் கவினயம் இயக்கி இருக்கிறார். ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன் சார்பில் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பேய்பசி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், வெங்கட்பிரபு, ஆர்யா, யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப்படத்தில் ஒரே ஒரு புரோமோ பாடல் மட்டுமே உள்ளதாக படத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் யுவன், படத்தின் நாயகன் ஹரி கிருஷ்ணா பள்ளிக்காலத்திலிருந்தே நண்பன் எனக் கூறினார். ஹரிக்காக ஒரு படத்தை தயாரிக்கலாம் என நினைத்தப்போது ஹரி இலங்கைக்கு சென்றுவிட்டார்.
இப்போது ஹரிக்கு ஒரு படம் சாத்தியமாகியிருக்கிறது. ஹரியின் நட்புக்காக இந்தபடத்திற்கு நான் தான் இசையமைக்க வேண்டுமென முடிவெடுத்தேன். அவருடைய நட்புதான் முக்கியம் பணம் இரண்டாம் பட்சம்தான் என யுவன் தெரிவித்தார்.
இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது... இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் புது முயற்சி எடுத்துள்ளார். இந்தக் கதையைச் சொல்லி எப்படி தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது எனக் கூறினார்.