Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பொது இடத்தில் புகை பிடித்த அஜய் தேவ்கனுக்கு அபராதம்
நடிகர் அஜய் தேவ்கன் கடந்த மே மாதம் கோவா வந்திருந்தார். அங்குள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸில் நடந்த தனது கோல்மால்3 படத்தின் புரமோஷனல் காட்சிக்காக வந்திருந்தார். அப்போது தியேட்டர் வளாகத்தில் புகை பிடித்துள்ளார்.
இதை சிலர் படம் பிடித்து தேசிய புகை ஒழிப்புக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். மீடியாக்களிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தேசிய புகை ஒழிப்புக் கழகம், கோவா மாநில சுகாதாரத் துறை இயக்குநர் ராஜ்நந்தா தேசாய்க்கு புகார் அனுப்பியது.
இதையடுத்து தேவ்கனுக்கு ரூ.100 அபராதம் விதித்து அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாநில குற்றப் பிரிவு போலீஸிலும் சுகாதாரத் துறை புகார் கொடுத்துள்ளது.
இன்று தேவ்கனுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என காவல்துறை டிஎஸ்பி தியோ பெனாலிகர் கூறியுள்ளார்.
பொது இடத்தில் தம் அடித்து தேவ்கன் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரி மாதம் சண்டிகரில் இப்படித்தான் பொது இடத்தில் தம் அடித்து மாட்டிக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.