டேம் 999: தமிழக அரசின் தடையை எதிர்த்து இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்றும், அதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து அந்த படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.
தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 ரிலீஸானது. தற்போது தமிழக அரசின் தடையை எதிர்த்து படத்தின் இயக்குனர் சோஹன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
பிரேசில், சீனா போன்ற நாடுகளில் அணைகள் உடைந்ததால் ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் டேம் 999 படத்தை எடுத்தேன். அதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது நியாயமற்றது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த சோஹன் ராய், தமிழகத்தில் டேம் 999 படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு மற்றும் தமிழக அரசின் தடையால் அந்த படத்திற்கு நாடு முழுவதும் நல்ல விளம்பரம் கிடைத்ததாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












