Just In
- 9 min ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 55 min ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 59 min ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!
Don't Miss!
- News
வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்
- Automobiles
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமல் தலைமையில் ஃபிக்கி மாநாடு... கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்தார்!

நடிகர் கமல் ஹாஸன் தலைமையில் 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகை திரிஷா குத்து விளக்கேற்றினார். பிக்கி அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜீவ்குமார் வரவேற்று பேசினார்.
தமிழக ஆளுநர் ரோசய்யா விழாவில் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார்.
"இந்திய திரையுலகில் இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச சினிமாவுக்கு நிகராக இந்திய திரையுலகம் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களையும் மக்களுக்கு கருத்துக்கள் சொல்லும் படங்களையும் தயாரிக்க வேண்டும்," என்றார்.
தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் நடிகர் கமலஹாசன் மாநாட்டில் பங்கேற்று பேசுகையில், "டிஜிட்டல் சினிமா வளர்ந்தால் அரசுக்கு வருமானம் பெருகும். திரையுலகம் டிஜிட்டல் சினிமா மாற்றத்துக்குள் வந்தே தீரும்," என்றார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், டைரக்டர் பாலச்சந்தர், யு.டி.வி. சேர்மன் ரோனிஸ் க்ரூவாலா, சேம்பர் தலைவர் கல்யாண், பிக்கி அமைப்பின் தமிழக தலைவர் ரபீக் அகமது ஆகியோர் பேசினர்.