Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்- ரத்தக் கட்டு அகற்றப்பட்டது
மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நடிகை மனோரமா சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு குளியலறையில் தடுமாறி விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு விட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அது உறைந்து போயிருந்தது. இதையடுத்து அதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் தீர்மானித்தனர். அதன்படி இன்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது தலையில் ஏற்பட்டிருந்த ரத்த உறைவுக் கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அவரது நிலை மேம்பட்டுள்ளதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் மனோரமா குடும்பத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனோரமா நல்ல சுய நினைவுடன் இருப்பதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓரிரு நாளில் அவர் வீடு திரும்பி விடலாம் என்று டாக்டர்கள் கூறியிருப்பதாகவும் மனோரமாவின் மகன் பூபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனோரமாவை நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஏற்கனவே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.