twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி 'சிங்க'த்தை தடை செய்யக் கோரி வழக்கு

    By Shankar
    |

    இந்தியில் தயாராகியுள்ள சிங்கம் படத்தின் ரீமேக்கை வெளியிடத் தடை கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் சிங்கம். இதனை சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா தயாரித்தார். இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜய்தேவ்கன், காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.

    வருகிற 22-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்இந்தப் படத்துக்கு தடை கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "சிங்கம் படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது படத்தை விற்கும்போது 25 சதவீதம் பங்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். தற்போது இப்படம் ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. அதில் 25 சதவீதம் பங்காக ரூ. 12.5 கோடி தர வேண்டும்.

    ஆனால் அப்பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

    ஞானவேல்ராஜா சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் இவ்வழக்கில் பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    English summary
    Gnanavel Raja, producer of Tamil hit Singam seeking ban on the release of the film's Hindi version. He filed a petition in Madras High court today and the judge ordered to send notice to the producer of Hindi version.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X