twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடும்ப பிரச்சனையையே தீர்க்காதவர்-சிரஞ்சீவி மீது ரோஜா தாக்கு!

    By Staff
    |

    Roja
    தன் குடும்பப் பிரச்சினையையே தீர்க்க முடியாத சிரஞ்சீவி நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி நடிகை ரோஜா.

    ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

    சிரஞ்சீவி 3 நாள் பிரசாரம் செய்தாலே தொண்டை வலி என்கிறார். 4 நாள் பிரசாரம் செய்தால் இடுப்பு வலி என்கிறார். தொடர்ந்து அவரால் பிரசாரம் செய்ய முடிவதில்லை. ரதத்தில் இருந்து இறங்கி தனது தம்பி பவன் கல்யாணை ஏற்றி விடுகிறார். அவர் எத்தனை நாள் பிரசாரம் செய்வார் என தெரியவில்லை.

    பவன் கல்யாண் ஒருவரை திருமணம் செய்து மற்றொருவருடன் குடித்தனம் நடத்துகிறார். இவர் எப்படி மக்களை வழி நடத்துவார். இவர் சொன்னால் யார் கேட்பார்கள். முதலில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

    சிரஞ்சீவியால் தனது குடும்ப பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார். பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கி 4 மாதம் ஆகியும் அதற்கு ஒரு வடிவம் கொடுக்க சிரஞ்சீவியால் முடியவில்லை.

    சிரஞ்சீவி சூப்பர் ஸ்டார் என்று சொல்லுகிறார். ஆனால் நடிகர் சங்க தேர்தலில் சிரஞ்சீவி குடும்பத்தினர் தோல்வியை தழுவியுள்ளனர்.

    நடிகர் சங்க தேர்தலிலேயே குடும்பத்தினரை வெற்றி பெற வைக்க முடியாதவர் பொதுத்தேர்தலில் எப்படி ஜெயிப்பார். நடிகர்களை பார்த்து யாரும் ஓட்டு போடுவதில்லை. என்.டி. ராமராவ் குடும்பத்தினரை யாரும் நடிகர்களாக பார்க்கவில்லை. அரசியல்வாதிகளாக பார்க்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

    சிரஞ்சீவியோ, சுயலாபத்துக்காக கட்சி தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது இந்த ஷோ சீக்கிரம் முடிந்துவிடும் என்றார் ரோஜா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X