Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
தியேட்டர்களில் பார் வைக்க அனுமதி கேட்கும் உரிமையாளர்கள்
அரசும், தியேட்டர்களுக்கும், திரையுலகினருக்கும் வண்டி வண்டியாக சலுகைகளை அளித்துக் கொண்டுதான் உள்ளது. அப்படியும், இன்னும் தேவை என்ற பாட்டைத்தான் இரு தரப்பினரும் பாடி வருகின்றனர்.
இப்போது தியேட்டர் உரிமையாளர்கள் மது பான பார்களை தியேட்டர் வளாகத்தி்ல் வைத்துக் கொள்ள அனுமதி கோரியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
தியேட்டர் தொழில் பல்வேறு காரணங்களால் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. அவற்றில் தற்போது 1,400 தியேட்டர்கள் தான் உள்ளன. அதில் 400 தியேட்டர்கள் மூடிக்கிடக்கிறது. தியேட்டர் அதிபர்கள் பிழைப்பு நடத்துவதே கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே தியேட்டர்களில் மதுபான பார் திறக்க அனுமதி அளித்தால் அதன் மூலம் சிறிதளவு வருமானம் ஈட்ட முடியும். அரசுக்கும் அதனால் வருவாய் கிடைக்கும் என்றார் அவர்.
அரசு அமைத்துள்ள சினிமா சீரமைப்பு குழுவினரிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
பார் திறக்க சரத் எதிர்ப்பு..
தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது நல்ல முடிவல்ல என்றார்.
அதேபோல அபிராமி தியேட்டர் வளாக உரிமையாளர் அபிராமி ராமநாதனும் இதை எதிர்த்துள்ளார்.
'கொம்பான' படத்தைப் பார்க்க வந்து படம் சரியில்லாமல் கடுப்பில் ரசிகர்கள் எழுந்து வீட்டுக்குச் செல்வதை தடுத்து மது பார்களுக்கு இழுத்து அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பலாம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் யோசிக்கிறார்களோ என்னவோ..!