twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைஷ்ணவி தற்கொலை வழக்கு- நடிகர் தேவ் ஆனந்த் சிறையில் அடைப்பு

    By Sudha
    |

    Vaishnavi
    டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதற்காக 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இன்னொரு டிவி நடிகர் தேவ் ஆனந்த் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் துணை கேரக்டர்களில் நடித்திருந்தார். இவரும், டிவி நடிகர் தேவ் ஆனந்த்தும் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு, வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது தன்னை 2வதாக கல்யாணம் செய்து கொள்ளும்படி தேவ் ஆனந்த் தொந்தரவு செய்தார், மிரட்டினார். இதனால்தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீஸில் தெரிவித்தனர். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தேவ் ஆனந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ரூ. 10,000 அபராதம், 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தேவ் ஆனந்த்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    English summary
    Small time TV Actor Dev Anandh was today lodged in Puzhal jail in Actress Vaishnavi suicide case. He was sentenced to 5 yrs and fined Rs. 10,000 by a Chennai court 2 days back, for abetting Vaishnavi to commit suicide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X