Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வைஷ்ணவி தற்கொலை வழக்கு- நடிகர் தேவ் ஆனந்த் சிறையில் அடைப்பு
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் துணை கேரக்டர்களில் நடித்திருந்தார். இவரும், டிவி நடிகர் தேவ் ஆனந்த்தும் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு, வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது தன்னை 2வதாக கல்யாணம் செய்து கொள்ளும்படி தேவ் ஆனந்த் தொந்தரவு செய்தார், மிரட்டினார். இதனால்தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீஸில் தெரிவித்தனர். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தேவ் ஆனந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ரூ. 10,000 அபராதம், 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தேவ் ஆனந்த்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.