Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News 20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
வடிவேலு தலைமறைவு? சிங்கமுத்துவிடம் விசாரணை!!
எனவே அவருக்கு நிலம் வாங்கிக் கொடுத்த சக காமெடி நடிகர் சிங்கமுத்துவிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர் போலீசார்.
காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக வடிவேலுவையும் அவர் மனைவி விசாலாட்சியையும் விசாரிக்க முடிவு செய்த போலீஸ் அது தொடர்பான சம்மனை வழங்கச் சென்றபோது, வடிவேலு இல்லை.
ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவரது உறவினர்கள், உதவியாளர்கள் யாரும் எதுவும் சொல்ல மறுக்கிறார்களாம்.
வடிவேலுவின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
சிங்கமுத்துவிடம்...
இதைத் தொடர்ந்து இந்த நிலத்தை வடிவேலுவுக்கு வாங்கிக் கொடுத்த சிங்கமுத்துவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரும் விசாரணைக்கு வர சம்மதித்துள்ளார்.
இதுகுறித்து சிங்கமுத்து கூறுகையில், "வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார்.
பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது," என்றார்.
இதற்கிடையே வடிவேலுவைத் தேடி அவரது மதுரை வீட்டுக்கும் போலீசார் விரைந்துள்ளனர்.