Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எந்திரன் கதைத் திருட்டு: எழுத்தாளர் வழக்கில் ஷங்கருக்கு நோட்டீஸ்
இது தொடர்பாக, சிதம்பரத்தை சேர்ந்த எழுத்தாளர் ஆர்னிகா நாசர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:
நான் எழுதிய 31 நாவல்களை தொகுத்து மணிமேகலை பிரசுர நிறுவனம் ரோபோட் தொழிற்சாலை என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டது. இதில் உள்ள நாவல் வாரப் பத்திரிகை ஒன்றிலும் வெளியானது. இந்த ரோபோட் தொழிற்சாலை நாவலில் உள்ள கதையை இயக்குநர் ஷங்கர் திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது.
இதற்காக எனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும். எந்திரன் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி இயக்குநர் ஷங்கர் மற்றும் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
எந்திரன் கதை உரிமை கோரி ஏற்கெனவே ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஷங்கருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் போலீசார் அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.