Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
படையப்பா முபாரக்
கேரள மாநிலம் திருச்சூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்துர் முபராக். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் முபராக் ரஜினிகாந்த் மீதுள்ள திரைப்பற்று காரணமாக தனது பெயரை படையப்பா முபராக் என்று மாற்றிக் கொண்டதுடன் தனது லாட்டரி கடைக்கும் ரஜினிகாந்த் நடித்த படப்பெயரான பாபா பெயரை வைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்தை நேரில் சந்தித்த படையப்பா முபராக் அவரிடம் இருந்து உதவிகளை பெற்றுள்ளார். இதனால் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிப்பால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் தகவல் படையப்பா முபராக்கை பெரிதும் பாதித்தது. அவர் பள்ளி வாசலுக்கு சென்று ரஜினிக்காக தொழுகை நடத்தினார்.
மேலும் கடந்த 21ம்தேதி திருச்சூர் வடக்க நாதர் கோயிலுக்கு சென்ற படையப்பா முபராக் ரஜினிகாந்த பூரண நலம் பெற வேண்டி 101 தேங்காய்களை உடைத்தார்.
நேற்று இரண்டாவது முறையாக வடக்கநாதர் கோயிலுக்கு சென்ற அவர் 101 தேங்காய்களை உடைத்ததுடன் சிறப்பு வழிபாடுகளையும் நடத்தினார்.