twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைகள் குறித்து தொடர் வதந்தி- திரையுலகம் டென்ஷன்

    By Staff
    |

    Shreya
    சென்னை: முன்னணி நடிகைகள் குறித்து தொடர்ந்து பரவி வரும் விஷமத்தனமான வதந்திகளால் திரையுலகம் டென்ஷனாகியுள்ளது.

    நேற்று நள்ளிரவில் ஷ்ரியா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த வதந்திகள் எல்லாம் நள்ளிரவில்தான் பரவுகின்றன என்பதால் குறிப்பிட்ட சிலர்தான் வேண்டும் என்றே இதுபோல செய்தி பரப்புவதாக நம்பப்படுகிறது.

    சமீபத்தில் நடிகை சோனியா அகர்வால் விஷம் குடித்து விட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா அகர்வால், தன் தோழிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது.

    அதேபோல பிரபல தயாரிப்பாளர் ஜபக் தற்கொலைக்கு முயற்சித்ததாக ஒரு வதந்தி பரவியது. உடனடியாக அவர் அதை மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஷ்ரியா குறித்த வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இப்படி வதந்தி பரப்புவோரைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என திரையுலகினர் விரும்புகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X